இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஏற்பாட்டில் இலங்கை அரசினால் 2009 மே 17,18 அன்று முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் உறவுகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று மாலை சென்னை வில்லிவாக்கத்தில் பேரெழுச்சியுடன் நடைபெற்றது,
முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்கு மவுனம் செலுத்தும் நாள் அல்ல இது நம் மவுனத்தை நாம் கலைக்கும் நாளே இது. அங்கே நடைபெற்றது போர்க்குற்றமல்ல சிறீலங்கா அரசால் திட்டமிட்டு நடைபெற்ற இனப்படுகொலை என்பதை உலகுக்கு ஒங்கி உரத்துச்சொல்லுவோம், இந்திய அரசின் பதவிக்காக ஈழப்பிரச்சினையை வைத்து அரசியல் செய்பவர்கள்
தஞ்சையில் உருவாகிவரும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றமானது எதிர்கால தலைமுறையினருக்கு பல்லாண்டு காலம் தமிழீழ விடுதலைப்போராட்டத்தை அழியாமல் நினைவுப்படுத்திக்கொண்டிருக்கும் என்று சென்னையில் நேற்று நடைபெற்ற முள்ளிய்வாய்க்கால் 3ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் அய்யா பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.