தமிழ் தேசிய கூட்டமைப்பின் தற்போதைய தலைமைத்துவமானது தமிழர்களின் விடுதலைக்கான அரசியலை தவறான பாதையில் திசைதிருப்பி தமிழர்களது அரசியல் உரிமைகளை கேள்விக்குள்ளாக்கியுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னனி தனது நீண்ட அறிக்கையில் குற்றஞ்சாட்டியுள்ளது. திங்கட்கிழமையன்று மாலை தாயகத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இக்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்ட்டுள்ளன.
இலங்கையில் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தமக்கு தொலைபேசி வசதிகள் தரப்படவில்லையென்று கண்டனம் தெரிவித்து ஞாயிற்றுக் கிழமை தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக அவரது மனைவி அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விரைவில் இந்தியா வருமாறு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத் துள்ளார். ஜனாதிபதியைச் சந்தித்த இந்திய வெளிவிகாரச் செயலர் நிரூபமா ராவ் ஊடாகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்திப்பு கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.