பிரபாகரன் தீவிரவாதி அல்ல என் நண்பர்:கலைஞர்
[தமிழக நேரம் : April 19th, 2009 at 10:07]
தமிழக முதல்வர் கருணாநிதி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இலங்கை பிரச்சனை குறித்து மனம் திறந்துள்ளார்.
பிரபாகரன் தீவிரவாதி அல்ல என் நண்பர். நல்ல தீர்ப்புக்காக உயர்ந்த நோக்கத்திற்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள் விடுதலைப்புலிகள். ஆனால் நோக்கத்தை அடைய நினைக்கும் வழிதான் தவறு.
இலங்கையில் தாக்குதலில் உயிரிழப்புகளை கேள்விப்படும் போது நான் மிகவும் மனம் வருந்துகிறேன். ஈழத்தமிழர் வாழ்வில் விரைவில் விடிவெள்ளி பிறக்கும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
|