|
13 திருத்த சட்டமூலத்திற்கு எதிராக ஜே.வி.பி சுவரொட்டிப் பரப்புரை!
[தமிழக நேரம் : July 3rd, 2009 at 12:12]
சிறீலங்கா அரசு காலத்தைப் போக்குவதற்கு கையில் எடுத்திருப்பதாகக் கூறப்படும் 13வது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக மற்றொரு இனவாதக் கட்சியான ஜே.வி.பியும் குரல் கொடுத்துள்ளது.
13வது திருத்த சட்ட மூலத்தில் மாகாண சபைக்கு காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட இருப்பதாகக் கூறிய சிங்கள இனவாதக் கட்சியான, பௌத்த பிக்குகளைக் கொண்ட ஜாதிக ஹெல உறுமய, அரசில் இருந்து வெளியேற இருப்பதாக எச்சரித்திருந்தது.
தற்பொழுது இதே குற்றச்சாட்டை முன்வைத்துள்ள ஜே.வி.பி, அரசின் நடவடிக்கைக்கு எதிராக இன்று கொழும்பில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளது.
சிறீலங்கா அரசின் இந்த நடவடிக்கைக்கு பின்னால் இந்தியாவின் அழுத்தம் இருப்பதாக, ஜே.வி.பியின் சுவரொட்டிகளில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் இந்தியா சென்றிருந்த பசில் ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச, மற்றும் லலித் வீரதுங்க ஆகியோர், அதிகாரப் பரலாக்கல், “வணங்கா மண்” கப்பல் உட்பட சில உறுதிமொழிகளை இந்தியாவிற்கு வழங்கியிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
| |