TamilSeythi.com
முகப்பு     எம்மைப்பற்றி     ஆவணம்     இன்றைய ஒளிப்பதிவு     அறிவித்தல்
பக்கங்கள்
தமிழீழம்
இலங்கை
தமிழ்நாடு
உலகம்
புலம்பெயர்தமிழர்
கட்டுரை
நிகழ்வுகள்
படத்தொகுப்பு

முகப்பு » இலங்கை » வவுனியா பூந்தோட்டம் முகாமில் தீ அனர்த்தம்: 112 குடிசைகள் சாம்பராகின- 3,000 பேர் நிர்க்கதி
பிரதி எடுக்க
 நண்பருக்கு அனுப்ப
வவுனியா பூந்தோட்டம் முகாமில் தீ அனர்த்தம்: 112 குடிசைகள் சாம்பராகின- 3,000 பேர் நிர்க்கதி

வவுனியா பூந்தோட்டம் முகாமில் தீ அனர்த்தம்: 112 குடிசைகள் சாம்பராகின- 3,000 பேர் நிர்க்கதி

வவுனியாவில் இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருந்த பூந்தோட்டம் முகாமில் இன்று ஏற்பட்ட தீ அனர்த்தத்தில் 112 குடிசைகள் முற்றாக எரிந்து சாம்பராகியதனால் சுமார் 3,000 பேர் நிர்க்கதியாகியுள்ளனர்.
பூந்தோட்டம் முகாமில் உள்ள குடிசை ஒன்றில் இன்று வியாழக்கிழமை முற்பகல் 9:30 மணியளவில் ஏற்பட்ட மின்சார ஒழுக்கையடுத்தே அப்பகுதியில் இருந்த 112 வீடுகளும் எரிந்து சாம்பராகின.

தீ பரவத் தொடங்கியதும் அங்கிருந்த மக்கள் தீயைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்தபோது தீ விரைவாக பரவி அங்கிருந்த அனைத்து குடிசைகளையும் எரித்து சாம்பராக்கியதுடன் மக்களின் சொத்துகளும் எரிந்து நாசமாகியுள்ளன.

தீ பரவியதை அடுத்து அப்பகுதிக்கு விரைந்த காவல்துறையினரும் படையினரும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். எனினும் அங்கிருந்த குடிசைகள் அனைத்தும் எரிந்து சாம்பராகிய பின்னரே தீயைக் கட்டுப்படுத்த அவர்களால் முடிந்தது.

இந்த தீ அனர்த்தத்தின்போது ஜந்து பேர் சிறிய எரிகாயங்களுக்கு உள்ளாகி வவுனியா மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தீ அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 3,000 பேர் தற்போது அரச அதிபர் கே.சண்முகத்தின் ஏற்பாட்டில் அங்குள்ள பொது இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உலர் உணவு மற்றும் உடைகளை பொது அமைப்புக்கள் பலவும் வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


இச்சம்பவம் குறித்து அரச அதிபர் கே.சண்முகம் தெரிவித்துள்ளதாவது:

இன்றைய தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான வசதிகளை வழங்கும் பணியை உடனடியாக ஆரம்பித்துள்ளோம்.

முகாமிலிருந்த நூற்றுக்கும் அதிகமான குடும்பங்களின் குடிசைகள் முற்றாக எரிந்து சாம்பராகியுள்ளன. தீ விபத்திற்கு மின்சார ஒழுக்கே காரணம் என்று முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என்றார்.

பூந்தோட்டம் பாடசாலைக் கட்டடத்திலேயே இந்த முகாம் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

இப்பகுதியில் உள்ள மேலதிக செய்திகள்
இணையத்தில் தேட
கடந்த வார முக்கிய செய்திகள்
சிறிலங்காவை கை கழுவிய யேர்மனி!
திருமலை துறைமுகம் மீது புலிகளின் வானூர்தி குண்டுத்தாக்குதல்
நல்லூர் கோயிலுக்கு செல்லும் மக்களை முக மூடி அணிந்த தலையாட்டி முன் நிறுத்தப்படுகின்றனர்!
தமிழர்கள் ஒரே சக்தியாக அணிதிரண்டு எதிரிக்கு தக்க பதிலடி கொடுக்கவேண்டும்- பா.நடேசன்
விடுதலைப் புலி உறுப்பினர்களை சரணடையுமாறு இராணுவத்தினர் அழைப்பு - உதய நாணயகார
புகைப்படம்
ஏறாவூரில் துணைப் படைக்குழுவின் பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் சுட்டுக்கொலை
ஏறாவூரில் துணைப் படைக்குழுவின் பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் சுட்டுக்கொலை
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  ஆவணம்  |  இன்றைய ஒளிப்பதிவு  |  அறிவித்தல்
Copyright © 2008 TamilSeythi.com