விவசாயிகளின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் எனக் கோரி தம்புள்ளவில் விவசாயிகள் போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.
ஜே.வி.பி.யின் சோசலிச விவசாயிகள் சங்கத்தினால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
தம்புள்ள கம்உதாவ பிரதேசத்தில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் தம்புள்ள நகர மத்தியில் உள்ள மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.வாழ்க்கைச் செலவு குறைக்கப்பட வேண்டும் எனவும், விவசாயிகளின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தால்
தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல்
முகவரி:
Tips@tamilseythi.info