|
வாழ்விடங்கள் அகற்றப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து-கொழுப்பில் மக்கள் போராட்டம்!
கொழும்பில் தமது வாழ்விடங்கள் இடித்து, அகற்றப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மக்கள் தொடரூந்துகளையும், வீதிகளையும் வழிமறித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.இன்று மாலை காலியிருந்தும், புறக்கோட்டையில் இருந்தும் சென்ற தொடரூந்துகள் கொம்பனித்தெருவில் வழி மறிக்கப்பட்டதால், மாலை நேர பயணித்தில் ஈடுபட்ட மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொம்பனித்தெரு பகுதியிலுள்ள குடியிருப்புக்கள், வியாபார நிலையங்களை அகற்றுவதற்கு எதிரான சிறீலங்காவின் உயர் நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பு வழங்கிய போதிலும், அதனையும் மீறி அரச அதிகாரிகள் குடியிருப்புக்களை தகர்த்துள்ளனர்.இதனால் கோபமடைந்த மக்கள் வீதிகளில் இறங்கி அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களிலும், வழிமறிப்புப் போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டம் நடத்துபவர்கள் கொம்பனித்தெரு மட்டுமன்றி கொள்ளுப்பிட்டி வரையும் சென்று வீதிகளை மறித்திருப்பதால், கொழும்பில் மாலைநேர போக்குவரத்து முடக்கம் கண்டுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
| |