ஜனாதிபதி மகிந்த,அவருடைய சகோதரருடைய அண்மைய ஊழல் அம்பலம்!!!
புதல்வரின் ரக்பியை பார்க்க ஜனாதிபதிக்கு 20 லட்சம் அரச பணம்
ஜனாதிபதியின் கனிஸ்ட புதல்வர் யோசித ராஜபக்ஸ கலந்து கொண்ட ரக்பி போட்டியொன்றை கண்டு களிப்பதற்காக 20 லட்ச ரூபா அரசாங்கப் பணம் வீண்விரயமாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கண்டியில் நடைபெற்ற இந்த ரக்பி போட்டியை கண்டு களிப்பதற்காக அலரி மாளிகைக்கு நேரடி ஒளிபரப்பை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்கு பணித்துள்ளார். கண்டி போகம்பரை மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றதாகத் தெரியவருகிறது.
நாட்டின் தலைவர் இவ்வாறு தனது சொந்த தேவைகளுக்காக அரசாங்கப் பணத்தை வீண்விரயமாக்கும் வகையில் நடந்து கொண்டமை குறித்து ரூபவாஹினி ஊழியர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாகத் தெரியவருகிறது.
பசில் ராஜபக்சவின் மகள் கட்டுனாயக்காவில் இருந்து கொழும்ம்பு வருவதற்கு அரசாங்க கெலிக்கொப்டர் தவறாக பாவிக்கப்பட்டுள்ளது
பசில் ராஜபக்சவின் மகள் கட்டுனாயக்காவில் இருந்து கொழும்ம்பு வருவதற்கு அரசாங்க கெலிக்கொப்டர் தவறாக பாவிக்கப்பட்டுள்ளது பசில் ராஜபக்சவின் மகள் சிங்கப்பூரிலிருந்து கட்டுனாயக்காவிற்கு மே- 17 ம் நாள் முற்பகல் 8.05 ற்கு வந்து சேர்ந்தார் இவருடைய பயணப்பை எந்தவித சோதனைக்கும் உட்படுத்தப்படவில்லை என்பது தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் விழவிக்கக்கூடியது என சிலர் கத்துகிறார்கள்.
இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தால்
தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல்
முகவரி:
Tips@tamilseythi.info