மன்னார் - முழங்காவில் பகுதி சிறீலங்கா இராணுவத்தினரின் வசம்!
மன்னார் மாவட்டத்தின் முழங்காவில் பகுதியினை சிறீலங்கா இராணுவத்தினர் இன்று மதியம் கைப்பற்றியுள்ளதாக சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.முழங்காவில் பகுதி விடுதலைப் புலிகளின் முக்கிய இடம் எனவும் இராணுவம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் இந்தச் செய்தி தொடர்பாக விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து எந்தச் செய்திகளும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நிருபர்:அன்பு
இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தால்
தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல்
முகவரி:
Tips@tamilseythi.info