|
சுவிஸ், அவுஸ்திரேலியா, கனடாவில் இன்று பொங்குதமிழ் நிகழ்வுகள்!
சுவிற்சர்லாந்து, அவுஸ்திரேலியா, கனடாவில் இன்று பொங்குதமிழ் பேரெழுச்சி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.இதற்கான முழுமையான ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், மக்கள் தன்னெழுச்சி கொள்ள தயாராகி இருப்பதாகவும், செய்திகள் தெரிவிக்கின்றன. பிரான்ஸில் நடைபெற்ற பொங்குதமிழ் பேரெழுச்சியில் 7,000இற்கும் மேற்பட்ட மக்களும், யேர்மனியில் 8,000இற்கும் மேற்பட்ட மக்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவிற்சர்லாந்திலும் பல்லாயிரக்கணக்கில் மக்கள் அணி திரண்டு தமது தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை, மற்றும் விடுதலைப் புலிகளே ஈழத்தமிழ் மக்களின் ஏக பிரதிகள் என்பதை அனைத்துலகுக்கு மீண்டும் எடுத்துரைக்க இருப்பதாக, ஏற்பாட்டுக் குழுவிலுள்ள பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.
கனடா ரொறன்ரோவில் இன்று மதியம் 2:00 மணிக்கு நடைபெறவுள்ள பொங்குதமிழ் நிகழ்வில் பேரெழுச்சியுடன் கலந்துகொள்ள மக்கள் தயாராகியுள்ளனர்.
நிருபர்:ஈழச்செல்வன்
|
இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தால்
தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல்
முகவரி:
Tips@tamilseythi.info |
| |