|
இத்தாலியில் இன்று பொங்கு தமிழ் – தமிழ் மக்கள் அணி திரள வேண்டுமென அழைப்பு
ஈழத் தமிழர்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பவற்றை வலியுறுத்தி பொங்குதமிழ் நிகழ்வுகள் பேரெழுச்சியுடன் புலம்பெயர் நாடுகளில் இடம்பெற்று வருகின்றன.இன்று (29.06.2008)மாலை 4:00 மணிக்கு இத்தாலி பலர்மோவில் இந்த எழுச்சி நிகழ்வு இடம்பெற இருக்கின்றது.
ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக இத்தாலிய அரசாங்கம் தவறான புரிதலைக்கொண்டிருக்கும் இந்த வேளையில், தமிழ் மக்கள் அணிதிரண்டு தமது எண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் என ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
|
இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தால்
தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல்
முகவரி:
Tips@tamilseythi.info |
| |