|
தமிழீழ தனியரசு மலர்வது, இந்தியாவிற்கும், சிங்கள இனத்திற்கும் நன்மையை ஏற்படுத்தும்
தமிழீழ தனியரசு மலர்வது, இந்தியாவிற்கும், சிங்கள இனத்திற்கும் நன்மையை ஏற்படுத்தும் என்று, புலவர் புலமைப்பித்தன் கூறியுள்ளார்.பெல்ஜியம் தலைநகர் பிறசல்ஸில், பொங்கு தமிழாக அணிதிரண்டு நின்ற தமிழீழ உறவுகளின் மத்தியில் சிறப்புரையாற்றிய புலவர் புலமைப்பித்தன், ராஜபக்ஸவிற்கு இந்தியா துணைபோவதுஎன்பது, எந்த வகையிலும் ஏற்புடையதல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தமிழீழ தனியரசு மலர்வது, தமிழினத்திற்கு மட்டுமன்றி,இந்தியாவிற்கும், சிங்கள இனத்திற்கும் உகந்த தீர்வாக அமையும் என்றும், புலவர் புலமைப்பித்தன் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், உலகில் சகல வல்லமைகளையும் கொண்ட ஒரேயொரு விடுதலை இயக்கமாக, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு திகழும் நிலையில், புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களின் எழுச்சி, போராளிகளின் கரங்களைப் பலப்படுத்தும் என்றும் புலவர் புலமைப்பித்தன் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி-பதிவு
|
இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தால்
தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல்
முகவரி:
Tips@tamilseythi.info |
| |