|
புலம்பெயர் நாடுகளில் கறுப்பு ஜுலை கவன ஈர்ப்பு!
1983ஆம் ஆண்டு இனப்படுகொலையின் 25வது ஆண்டையும், 1958 படுகொலையின் 50வது ஆண்டு நினைவையும் முன்னிட்டு, புலம்பெயர் நாடுகளில் பல்வேறு நினைவு நிகழ்வுகள், மற்றும் கவன ஈர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்தில் நாளை 23ஆம் நாள் கவன ஈர்ப்பு நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது என தெரியவருகின்றது.
பிரித்தானிய தமிழர் பேரவையும், தமிழ் நகரசபை உறுப்பினர்கள் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வு, இரவு 8:00 மணிமுதல் 10:00 மணிவரை இடம்பெறவுள்ளது. 1983ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையில் அரசினால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட 3,000இற்கும் மேற்பட்ட தமிழர்கள் நினைவுகூரும் வகையில், மெழுகுவர்த்தி ஏந்தி இந்த கவன ஈர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
நாளை 23ஆம் நாள் புதன்கிழமை நெதர்லாந்திலும் கறுப்பு ஜுலை கவன ஈர்ப்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நிருபர்:ஈழச்செல்வன்
|
இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தால்
தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல்
முகவரி:
Tips@tamilseythi.info |
| |