யாழ். பல்கலைக்கழகத்துக்கு கூடுதல் சிங்கள மாணவர்களுக்கு அனுமதி
[தமிழக நேரம் : February 8th, 2010 at 09:37]
யாழ் பல்கலைக்கழகத்துக்கு கூடுதல் சிங்கள, முஸ்லிம் மாணவர்களை அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ் பல்கலைக்கழகத்தில் பிற மாவட்ட சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் முன்னர் சென்று கல்வி கற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தபோதும், போர் சூழல் காரணமாக அது சாத்தியப்படவில்லை என்று கூறியுள்ள காமினி சமரநாயக்க -
தற்போது அங்கு கல்வி கற்பதற்கு பல மாணவர்கள் ஆர்வம் காட்டியிருப்பதால் யாழ் பல்கலைக்கழகத்திற்கான பிற மாவட்ட மாணவர் அனுமதி கோட்டாவை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாக கூறியள்ளார்.
தற்போது நாடு முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்களில் 21 ஆயிரம் மாணவர்களை உள்வாங்குவதற்கான நடவடிக்கை எடுத்துவருவதாகவும் இவர்களில் 1900 பேர் யாழ் பல்கலைக்கழகத்துக்கு வெளிமாவட்டங்களில் இருந்து உள்வாங்கப்படவுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இந்த கோட்டாவை மேலும் அதிகரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
|