TamilSeythi.com - தமிழ் செய்தி இணையம்
முகப்பு எம்மைப்பற்றி ஆவணம் இன்றைய ஒளிப்பதிவு மாவீரர் நாள் 2008
பக்கங்கள்
தமிழீழம்
இலங்கை
தமிழ்நாடு
உலகம்
புலம்பெயர்தமிழர்
கட்டுரை
நேயர்காணால்

கேலிச்சித்திரம்

விளம்பரங்கள்




Tamil Search Engine
முகப்பு » தமிழீழம் » வவுனியாவில் முன்நகர்வு முறியடிப்பு: 5 படையினர் பலி; 7 பேர் காயம்
பிரதி எடுக்க
 நண்பருக்கு அனுப்ப
வவுனியாவில் முன்நகர்வு முறியடிப்பு: 5 படையினர் பலி; 7 பேர் காயம்

வவுனியாவில் முன்நகர்வு முறியடிப்பு: 5 படையினர் பலி; 7 பேர் காயம்

வவுனியா மாவட்டத்தில் உள்ள பாலமோட்டை குஞ்சுக்குளம் பகுதி ஊடாக சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் ஐந்து படையினர் கொல்லப்பட்டுள்ளனர். ஏழு பேர் காயமடைந்துள்ளனர். படைத்தரப்பைச் சேர்ந்தவரின் உடலம் உட்பட படைப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பாலமோட்டை குஞ்சுக்குளம் ஊடாக நேற்று வியாழக்கிழமை முற்பகல் 9:00 மணியளவில் சிறிலங்காப் படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் எம்.ஐ௨4 ரக தாக்குதல் உலங்குவானூர்தியின் சூட்டாதரவுடன் முன்நகர்வினையும் ஊடுருவல் நடவடிக்கையினையும் மேற்கொண்டனர்.

இதற்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர எதிர்த்தாக்குதல் நடத்தினர்.

இத்தாக்குதலில் ஐந்து படையினர் கொல்லப்பட்டனர். ஏழு படையினர் காயமடைந்தனர்.

படையினரின் உடலம் உள்ளிட்ட படைப் பொருட்கள் என்பன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன.

நேற்றிரவு வரை படையினரின் முன்நகர்வுக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதல் தொடர்ந்தது.
 

 

இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தால் தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: Tips@tamilseythi.info

இப்பகுதியில் உள்ள மேலதிக செய்திகள்
Custom Search

எனது தொடக்கப் பக்கமாக்குக!

இணையத்தில் தேட
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  ஆவணம்  |  இன்றைய ஒளிப்பதிவு  |  மாவீரர் நாள் 2008
Copyright © 2008 TamilSeythi.com - தமிழ் செய்தி இணையம்