ஓமந்தையில் மத்திய மகா வித்தியாலயத்தில் 1800 போராளிகள் சிறை வைப்பு!
[தமிழக நேரம் : July 3rd, 2009 at 12:10]
ஓமந்தை மத்திய மகா வித்தியாலயத் தடுப்பு வதை முகாமில் 1800 போராளிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என தடுப்பு முகாமில் உள்ள போராளி எழுதிய மடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்னியில் இறுதிப் போர் நடவடிக்கையில் சிறீலங்காப் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் மே 15ம் நாள் தொடக்கம் 19ம் நாள் வரையான காலப் பகுதிக்குள் மக்களுடன் சென்ற போராளிகளே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
போராளிகள் என ஒப்புக்கொண்டவர்களும், சிறீலங்காப் படையினரால் இனங்காணப்பட்ட போராளிகளும் இத் தடுப்பு முகாங்களில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
தடுத்து வைக்கப்பட்ட போராளிகளில் 38 போராளிகள் நிர்வாணமாக கை, கால் கட்டப்பட்ட நிலையில் நாளாந்தம் மிகப் பெரும் வதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றர்.
இவர்களுக்கு உண்பதற்காக ஒரு சிறங்கை சோறு உணவாகக் கொடுக்கப்படுகின்றது. அத்துடன் வந்த நாள் தொடக்கம் மாற்ற உடைகள் இன்றி அதே உடையுடன் இருக்கின்றனர்.38 போராளிகளுக்கு நடத்தப்படும் வதைகளுடன் ஒப்பிடும் போது நாங்கள் நலமாக உள்ளோம் என அந்த மடலில் குறித்த போராளி குறிப்பிட்டுள்ளார்.