வடமராட்சியில் புலிகளின் கொமாண்டோத் தாக்குதலில் படையினர் இருவர் பலி
யாழ். வடமராட்சிப் பகுதியில் நிலைகொண்டிருந்த சிறிலங்காப் படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு கொமாண்டோக்கள் நடத்திய தாக்குதலில் இரண்டுக்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
வடமராட்சி கலிகைப் பகுதியில் நிலைகொண்டிருந்த சிறிலங்காப் படையினர் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12:00 மணியளவில் விடுதலைப் புலிகளின் சிறப்பு கொமாண்டோக்கள் தாக்குதல் நடத்தினர்.
இத்தாக்குதலிலேயே இரண்டுக்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டனர்.
இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தால்
தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல்
முகவரி:
Tips@tamilseythi.info