|
29 ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டில் தஞ்சம்
சிறீலங்கா படையினரது ஆக்கிரமிப்பு போர் நடவடிக்கைகள் காரணமாக மேலும் 11 ஈழத் தமிழர்கள் நேற்று காலை தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளனர்.மன்னார், வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த 7 பெண்கள் உட்பட 11 பேர் தனுஸ்கோடி மணல் திட்டில் இறக்கி விடப்பட்டிருந்த நிலையில், இந்திய கரையோர காவல் படையினால் காப்பாற்றப்பட்டனர்.
இதேவேளை, முல்லைத்தீவில் இருந்து சென்ற 6 குழந்தைகள், 7 பெண்கள் உட்பட மேலும் 18 பேர் நேற்று இராமேஸ்வரம், அரிச்சல்முனைக்கு சென்று தஞ்சம் கோரியுள்ளனர்.இவர்களை அனைவரையும் விசாரணை செய்த கியூ பிரிவு காவல்துறையினர், மண்டபம் புலம்பெயர்ந்தோர் முகாமில் தங்க வைத்துள்ளனர் என தெரியவருகின்றது.
நிருபர்:செல்வி
| |