Tamilseythi.com
முகப்பு எம்மைப்பற்றி தொடர்புகளுக்கு விளம்பரம்
பகுதிகள்
தமிழீழம்
இலங்கை
தமிழகம்
உலகம்
சினிமா
கட்டுரை
புலம்
நேர்காணல்
காணொளி
முகப்பு » தமிழகம் » இந்தியக்...
Print this article
Email this article

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் உண்ணாப்போராட்டத்தில் த.தே.பொ.க. பங்கேற்கிறது!

March 4th, 2012 at 15:17

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் உண்ணாப்போராட்டத்தில் த.தே.பொ.க. பங்கேற்கிறது!

ஈழத்தமிழரை இனப்படுகொலை செய்த இராசபக்சே கும்பலை போர்க்குற்றவாளியாக இந்திய அரசு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்தியக் கம்யூனிஸ்ட்டு கட்சி வருகிற 06.03.2012 செவ்வாய் அன்று சென்னையிலும், மாவட்டத் தலை நகரங்களிலும் உண்ணாப்போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது. இப்போராட்டத்தில் பங்கேற்குமாறு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி உள்ளிட்டு அனைத்து அமைப்பினரையும் அக்கட்சி அழைத்துள்ளது.

 

இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் அழைப்பை ஏற்று, மார்ச் 6 அன்று நடக்கும் உண்ணாப் போராட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பங்கேற்பதாக முடிவு செய்துள்ளது.

 

ஏற்கெனவே, பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் இராசபக்சே உள்ளிட்ட இலங்கை ஆட்சியாளர்களையும் படைத் தளபதிகளையும் நிறுத்தி விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும் பல்வேறு தமிழின அமைப்புகளும் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றன.

 

வடகிழக்குத் தமிழர் தாயகப் பகுதிகளில் இருந்து சிங்கள இராணுவம் முற்றிலும் அகற்ற வேண்டும், தமிழர்களின் அரசியல் நிலைப்பாட்டைத் தெரிந்து கொள்வதற்காக வடகிழக்கிலும், புலம் பெயர்ந்த தமிழர்களிடத்தும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், அரசியல் கைதிகளாக இலங்கைத் தீவில் அடைக்கப்பட்டுள்ளோருக்கு நிவாரணம் அளித்து விடுதலை செய்ய வேண்டும், இலங்கைத் தீவின் வடகிழக்குப் பகுதிகளை தமிழர்களின் தாயகப் பகுதி எனவும், அங்கு தமிழர்களுக்குத் தனிஅரசு உரிமை உண்டெனவும் அனைத்துலக சமூகம் அங்கீகரிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து கையெழுத்து இயக்கம் நடத்துகிற அதே நேரத்தில், இந்த உண்ணாப்போராட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் அழைப்பை ஏற்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும் கலந்து கொள்ளும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

தங்கள் உண்மையுள்ள,

கி.வெங்கட்ராமன்

பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

Leave a reply

*Your name:
*Your email: (email won't be published)
Your website: (optional)
*Comment:
*CAPTCHA: CAPTCHA

Other Recent Articles from the தமிழகம் Category:

SEARCH
PAST WEEK'S TOP 5
Page Views: 38
சென்னை - மெரினாவில் தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல்
Page Views: 34
இலங்கைப் பல்கலைக்கழகத்தில் - மாணவிகளது கன்னித் தன்மை பரிசோதிக்கப்படுகிறதா?: சஞ்சீவ பண்டார
Page Views: 31
இலங்கையின் கொலைக்களங்கள்! 2ம் பாகம் - "தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்" காணொளி
Page Views: 31
“கோத்தாவின் போர்” வெளியிட முன்னரே நாடாளுமன்றில் கிளம்பிய சர்ச்சை!
Page Views: 27
உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது அகழ்வாராய்ச்சி முடிவுகளை இந்திய மத்திய அரசு மறைப்பு
RANDOM PICK
ஜெனீவா ஐநா முன்றலில் 21,22ம் திகதிகளில் சுவிஸ் தமிழர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!
ஜெனீவா ஐநா முன்றலில் 21,22ம் திகதிகளில் சுவிஸ் தமிழர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  தொடர்புகளுக்கு  |  விளம்பரம்
Copyright © 2007 Tamilseythi.com