TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்
முகப்பு எம்மைப்பற்றி செய்தியாளராகலாம்! தொடர்புகளுக்கு விளம்பரம்
பகுதிகள்
தமிழ்நாடு
தமிழீழம்
இலங்கை
தேர்தல் 2010
உலகம்
புலம்பெயர்தமிழர்
கட்டுரை
செய்தி ஆய்வு
நேர்காணல்
இலக்கியம்
கவிதை
வரலாறு
பாடல்கள்
பொழுதுபோக்கு
தினம் ஒரு தகவல்
கருத்துப்படம்
ஆ‌ன்‌மிக‌ம்
வாசகர்
ஆக்கம்
கருத்துக்கள்
Home » தமிழ்நாடு » தமிழ்நாடு...
பிரதி எடுக்க
மின்னஞ்சலில் அனுப்ப

தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியின் பேச்சு - இராமதாசும் கண்டம்

[தமிழக நேரம் : July 3rd, 2009 at 12:35]

தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியின் பேச்சு - இராமதாசும் கண்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியின் பேச்சுக்கு, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாசும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

சிங்களர்களின் கோபத்தை அதிகப்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி பேசியிருப்பது, அதிர்ச்சி அளிக்கிறது என்று பா.ம.க நிறுவனர் இராமதாஸ் கூறியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறீலங்கா அதிபர் ராஜபக்ச நடத்திய இனப்படுகொலை குறித்து, பா.ம.க கட்சியின் தலைவர் ஜி.கே.மணி சட்டப்பேரவையில் விரிவாக எடுத்துக் கூறிய பின்னர், கருணாநிதி இந்தக் கருத்தைத் தெரிவித்திருப்பதாகக் கூறினார்.

இதேவேளை, தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி ஈழத்தமிழ் மக்கள் பிரச்சினையில் குத்துக் கரணம் அடித்திருப்பதாக, இந்திய ஊடகங்கள் கருத்து வெளியிட்டு வருகின்றன.

ஆரம்பத்தில் தனித் தமிழீழம் தான் தீர்வு எனக்கூறவந்த அவர், ஒருங்கிணைந்த இலங்கைக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்ற அர்த்தத்தில் நேற்று வெளியிட்ட கருத்துக்கள் பல்வேறு விமர்சனங்களை எதிர்நோக்கியுள்ளன.

முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவர் அடிக்கடி தனது நிலையை மாற்றிக் கொள்வது பற்றியும், இந்திய ஊடகங்கள் கரிசனை செலுத்தியுள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி உரிய நேரத்தில் சரியாகச் செயற்பட்டிருந்தால், வன்னியின் இறுதிக்கப்பட்டப் போரில் இழக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான தமிழ் உயிர்களையாவது காப்பாற்றி இருக்கலாம் என கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.


Leave a reply

*Your name:
*Your email: (email won't be published)
Your website: (optional)
*Comment:
*CAPTCHA: CAPTCHA
இப்பகுதியில் மேலதிகமாக உள்ளவை: தமிழ்நாடு
SEARCH
PAST WEEK'S TOP 5
Page Views: 502
மாவீரன் பண்டாரவன்னினின் நினைவுக்கல்லும் சிங்களப் படைகளால் சிதைப்பு!!
Page Views: 485
பிரபாகரன் இருக்கின்றாரா? இல்லையா?
Page Views: 320
சாமியார் நிதியானந்தா நடிகையுடன் உல்லாசம் - ஆசிரமங்கள் மீது மக்கள் தாக்குதல்
Page Views: 187
மூன்று படையினரால் பாலியல்வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ள 9 வயது தமிழ் மாணவி!
Page Views: 175
உயிருக்கு ஆபத்து: பொன்சேகாவை கைது செய்தவர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்!!
tamilseythi.com

Promote Your Page Too
RANDOM PICK
பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக முன்னாளர் விமானப்படை தளபதி ஜயலத் வீரக் கொடி?
பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக முன்னாளர் விமானப்படை தளபதி ஜயலத் வீரக் கொடி?
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  செய்தியாளராகலாம்!  |  தொடர்புகளுக்கு  |  விளம்பரம்
Copyright © 2007 TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்