இலங்கையின் கழுத்தில் கத்தி வைத்துள்ள இந்தியா?
March 18th, 2012 at 12:45
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கெதிரான தீர்மானத்தை வைத்து, 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தங்களை கொடுத்து வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஜெனிவாவில் இலங்கைக்கெதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை எதிர்த்து வாக்களிப்பதானால், இலங்கை 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற வகையிலேயே இந்தியா அழுத்தங்களைக் கொடுத்து வருவதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எனினும், 13ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளவாறு தமிழர்களுக்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை பகிர்ந்து வழங்குமாறு அழுத்தம் கொடுக்கப்படுகிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதேவேளை, ஜெனிவாவில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தை ஆதரிப்பதா, இல்லையா என்று இதுவரையில் இந்தியா அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
|