கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் நகரப் பகுதியில் சிறிலங்கா படையினர்
நடத்திய எறிகணைத் தாக்குதலில் ஒரு இளைஞர் கொல்லைப்பட்டுள்ளார். ஆறு
பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர். கத்தோலிக்க தேவாலயம் தேசமடைந்துள்ளது.
பூநகரியிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் தந்திரோபாய பின்வாங்கலைச்
செய்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் சண்டே லீடர் ஆங்கில நாளேடு
தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கையில்:- பூநகரியிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் தந்திரோபாய பின்வாங்கலைச்
செய்துள்ளனர். எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் சிறீலங்கா அரசாங்கம்
இராணுவ ரீதியில் அழிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
ஈழத் தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தி விஜய் ரசிகர் மன்றம் சார்பில்
திருப்பூர் பழையபேருந்து நிலையம் முன்பாகவும்,மற்றும் தொடர்வண்டி நிலையம்
அருகிலும் ஆக இரண்டு இடங்களில் நடைபெற்றது. பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள்
பங்கேற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தமிழின உணர்வாளர்களும்,பவேறு
இயக்கத்தைச் சார்ந்தவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
ஈழத்தில் நடைபெறும் ஈவிரக்கமற்ற இனப்படுகொலையை கண்டித்தும் இந்திய அரசு
போரை நிறுத்த வற்புறுத்தக் கோரியும் புதுவை மாநில அனைத்து கட்சிகள்
மற்றும் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தெருமுனைக் கூட்டங்கள் மூன்று
கட்டங்களாக நடைபெறுகிறது.
தமிழீழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து பூநகரி பிரதேசம்
சிறிலங்கா படையினரால் கைப்பற்றப்பட்டதற்கு தலைநகர் கொழும்பிலும் சிங்கள
கிராமங்களிலும் தொடர் வெற்றி விழா கொண்டாடப்படவுள்ளது.
மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பூநகரி ஊடாக செல்லும் ஏ32 வீதியை
படையினர் முழுமையாக கைப்பறிய செய்தியை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அரச
மற்றும் தனியார் தொலைக்காட்சி ஊடாக இன்று சனிக்கிழமை இரவு அறிவித்ததுடன்
தமிழீழ விடுதலை புலிகளுக்கும் சவால் விடுத்துள்ளார்.